கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பயந்த மக்கள் மரங்களில் ஏறி தப்பிய நிலையில், இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
கோவை: கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்று சாலைகளில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.
அந்த பகுதியில் இருந்த சில வாலிபர்கள், காளையை பார்த்து மரத்தின் மீது ஏறி அதன்மீது கல் மற்றும் சில பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளை அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளது.
பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காளை சாலைகளில் வேகமாக அங்கும் இங்கும் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாளாங்குளம் குளக்கரையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் காளை பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, காளையின் உரிமையாளர் யார், கயிறு அவிழ்த்து தானாக வந்ததா அல்லது யாராவது காளையை அங்கு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காங்கேயம் காளை திடீரென ஆக்ரோஷமாக நடந்து பொதுமக்களை விரட்டிய சம்பவம் காரணமாக உக்கடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அந்த பகுதியில் இருந்த சில வாலிபர்கள், காளையை பார்த்து மரத்தின் மீது ஏறி அதன்மீது கல் மற்றும் சில பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளை அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளது.
பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காளை சாலைகளில் வேகமாக அங்கும் இங்கும் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாளாங்குளம் குளக்கரையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் காளை பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, காளையின் உரிமையாளர் யார், கயிறு அவிழ்த்து தானாக வந்ததா அல்லது யாராவது காளையை அங்கு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காங்கேயம் காளை திடீரென ஆக்ரோஷமாக நடந்து பொதுமக்களை விரட்டிய சம்பவம் காரணமாக உக்கடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.