நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மழை காரணமாக ஏற்பட்ட கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்றும் பெய்து வரும் கனமழையால், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். நீண்டநேரப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், அதில், 2 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலும், இடிந்து விழுந்தக் கட்டிடத்தில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்துவது வழக்கம். இன்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால், பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியான சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், நேற்று போக்குவரத்து கோத்தகிரி வழியே திருப்பி விடப்பட்டது. சாலைகளைச் சீர் செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், 2-வது நாளாகப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இருப்பினும் ,கோளாறு சரிசெய்யாததால், ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தப் பொதுமக்கள் தொடர்ந்து மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் இன்றும் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்ட பின்னர், மீண்டும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மழை காரணமாக ஏற்பட்ட கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்றும் பெய்து வரும் கனமழையால், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். நீண்டநேரப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், அதில், 2 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலும், இடிந்து விழுந்தக் கட்டிடத்தில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்துவது வழக்கம். இன்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால், பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியான சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், நேற்று போக்குவரத்து கோத்தகிரி வழியே திருப்பி விடப்பட்டது. சாலைகளைச் சீர் செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், 2-வது நாளாகப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இருப்பினும் ,கோளாறு சரிசெய்யாததால், ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தப் பொதுமக்கள் தொடர்ந்து மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் இன்றும் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்ட பின்னர், மீண்டும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.