நீலகிரி, டிசம்பர் 1
உதகை-மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அதிகமான மரங்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

தற்போது, அதனை அகற்றி வரும் காவல்துறையினர் உதகை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி சாலை வழியாகச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.