நீலகிரி, டிசம்பர் 1
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இதனிடையே, நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து வருவதால் அங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 1) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இதனிடையே, நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து வருவதால் அங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 1) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.