ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்

கோவை, நவம்பர் 30

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைதொடந்து மாநிலக்குழு கூட்டம் பிற்பகல் 12 .30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

ஆர்.கே.நகர் இடைதேர்தல் தொடர்பாக இந்த மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மதவெறி பிடித்த பா.ஜ.க,   சோதனைகள் நடத்தி அதிமுகவை தன்னுடய கைப்பாவையாக மாற்றி இருக்கின்றது எனவும், பலவீனமான அதிமுக அரசை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக, பாஜக வேட்பாளார்களை தோற்கடித்து பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம் எனவும், அதன்படி திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப திமுகவை சொந்த மேடையில் இருந்து ஆதரக்கிறோம் எனறவர் இது தேர்தல் கூட்டணி அல்ல என  அவர் தெரிவித்தார். 

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பிளேக்ஸ்,பேனர்களை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்தவர், கோவையில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகம்,கரும்பு ஆராய்ச்சி மையம்,புலிகள் திட்ட முதன்மை வன பாதுகாவலர் அலுவலகம் ஆகியவற்றை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...