ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்

கோவை, நவம்பர் 30

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைதொடந்து மாநிலக்குழு கூட்டம் பிற்பகல் 12 .30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

ஆர்.கே.நகர் இடைதேர்தல் தொடர்பாக இந்த மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மதவெறி பிடித்த பா.ஜ.க,   சோதனைகள் நடத்தி அதிமுகவை தன்னுடய கைப்பாவையாக மாற்றி இருக்கின்றது எனவும், பலவீனமான அதிமுக அரசை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக, பாஜக வேட்பாளார்களை தோற்கடித்து பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம் எனவும், அதன்படி திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப திமுகவை சொந்த மேடையில் இருந்து ஆதரக்கிறோம் எனறவர் இது தேர்தல் கூட்டணி அல்ல என  அவர் தெரிவித்தார். 

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பிளேக்ஸ்,பேனர்களை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்தவர், கோவையில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகம்,கரும்பு ஆராய்ச்சி மையம்,புலிகள் திட்ட முதன்மை வன பாதுகாவலர் அலுவலகம் ஆகியவற்றை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...