நீலகிரியில் தொடர் மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


நவம்பர் 30 

ஒகி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தற்போது வலுப்பெற்றுள்ளதால் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் வெலிங்டன், அருவங்காடு, சிம்ஸ்பார்க், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால், ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், கிராமங்கள் இருளில் மூழ்கின . அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்சேவையை சீர்செய்தனர். 



மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் இருந்த மிகவும் பழமையான மரம் வேரோடு விழுந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...