நவம்பர் 30
ஒகி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தற்போது வலுப்பெற்றுள்ளதால் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் வெலிங்டன், அருவங்காடு, சிம்ஸ்பார்க், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால், ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், கிராமங்கள் இருளில் மூழ்கின . அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்சேவையை சீர்செய்தனர்.

மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் இருந்த மிகவும் பழமையான மரம் வேரோடு விழுந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.