கோவை, நவம்பர் 30
தொடர் மழைக் காரணமாக குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், ஆழியார் – வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தே, நாளை அருவிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர் மழைக் காரணமாக குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், ஆழியார் – வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தே, நாளை அருவிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.