கோவை, நவம்பர் 29
கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவியின் செல்போனை பறித்து சென்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
கோவை ஈச்சனாரி அருகே உள்ள முத்துநகர் பகுதியில் இன்று மாலை நடந்து சென்ற ஒரு கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞன் மாணவியின் செல்போனை பறித்து தப்பி ஒடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஒடிய இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை அருகே இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இதையடுத்து, அந்த இளைஞரை போத்தனூர் காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவியின் செல்போனை பறித்து சென்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
கோவை ஈச்சனாரி அருகே உள்ள முத்துநகர் பகுதியில் இன்று மாலை நடந்து சென்ற ஒரு கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞன் மாணவியின் செல்போனை பறித்து தப்பி ஒடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஒடிய இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை அருகே இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இதையடுத்து, அந்த இளைஞரை போத்தனூர் காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.