உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ்

நவம்பர் 29

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் கைவிடப்பட்டது. 

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்திற்குள் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். செவிலியர்களின் பிரதிநிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஒருதரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். 

இருப்பினும், அமைச்சரின் உத்தரவை அரசாணையாக வெளியிட வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், செவிலியர் போராட்டத்திற்குத் தடை விதித்ததுடன், செவிலியர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். உங்களின் போராட்டம் தேவையற்ற ஒன்று. அனைத்துக் கோரிக்கைகளுக்கும் செவிலியர்கள் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவமனையை ஏழை, நடுத்தர மக்கள்தான் நாடுகின்றனர். சம்பளம் போதவில்லை என்றால் வேலையை விடுங்கள். உங்களது போராட்டத்தால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது.

போராட்டத்தைக் கைவிடாவிட்டால், உங்களது தரப்பு வாதத்தைக் கேட்க மாட்டோம். நாளைப் பணி நேரத்தில் பணியில் இருக்க வேண்டும். உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால், அது சட்டவிரோதம். அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் செவிலியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, விரைவில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை கைவிடுவதாகச் செவிலியர்கள் அறிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...