நவம்பர் 29
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும், அவரின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து. அன்புசெழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில், இன்று அன்புசெழியனின் அலுவலக மேலாளர் முருகன், சென்னையில் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், அன்புசெழியனின் மற்றொரு மேலாளர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ஐதரபாத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறும் அன்புச்செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும், அவரின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து. அன்புசெழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில், இன்று அன்புசெழியனின் அலுவலக மேலாளர் முருகன், சென்னையில் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், அன்புசெழியனின் மற்றொரு மேலாளர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ஐதரபாத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறும் அன்புச்செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.