தயாரிப்பாளர் தற்கொலை விவகாரம் - அன்புச்செழியனின் மேலாளர்கள் கைது

நவம்பர் 29 

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும், அவரின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து. அன்புசெழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில், இன்று அன்புசெழியனின் அலுவலக மேலாளர் முருகன், சென்னையில் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், அன்புசெழியனின் மற்றொரு மேலாளர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஐதரபாத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறும் அன்புச்செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...