தயாரிப்பாளர் தற்கொலை விவகாரம் - அன்புச்செழியனின் மேலாளர்கள் கைது

நவம்பர் 29 

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும், அவரின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து. அன்புசெழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில், இன்று அன்புசெழியனின் அலுவலக மேலாளர் முருகன், சென்னையில் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், அன்புசெழியனின் மற்றொரு மேலாளர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஐதரபாத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறும் அன்புச்செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...