கோவை, நவம்பர் 28
கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் இருந்த ஓ.பி.எஸ். பெயரை மர்ம நபர்கள் கிழித்துச் சென்றனர்..

கோவையில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக கோவையில் நடைபெற்று வருகின்றன..
விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகிலும் வரவேற்பு பேனரை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர்.
அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சூழலில், இன்று மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
அ.தி.மு.க.வின் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கிடையே பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் இருந்த ஓ.பி.எஸ். பெயரை மர்ம நபர்கள் கிழித்துச் சென்றனர்..

கோவையில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக கோவையில் நடைபெற்று வருகின்றன..
விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகிலும் வரவேற்பு பேனரை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர்.
அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சூழலில், இன்று மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
அ.தி.மு.க.வின் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கிடையே பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.