திருப்பூர் அருகே ஒடும் ரயிலில் தீ விபத்து தவிர்ப்பு

திருப்பூர், நவம்பர் 28

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த ஓடும் ரயில் இன்ஜினில் திடீரென பயங்கர புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி.

இந்த விபத்தில் ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று காலை கோவையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் காலை சுமார் 7.15 மணி அளவில் திருப்பூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது ..அதன்பின்னர் ரயில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இன் ஜின் பகுதியில் இருந்து திடீரென் கடும்புகை கிளம்பிய அடுத்தத்துள்ள ரயில் பெட்டிகளில் பரவ ஆரம்பித்தது. 

இதனை கண்ட பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். நேரம் ஆக ஆக புகை தாக்கம் அதிகரிக்கவே இதனை கண்ட ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தினார். 

பின்னர் ரயில் சக்கரத்தில் இருந்து கிளம்பிய புகையை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டதோடு பயணிகள் உயிர் தப்பினர். 

சுமார் 15 நிமிடம் தாமதமாக.ரயில் கிளம்பியது. இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...