கோவை, நவம்பர் 27
காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கக்கோரி கோவை மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், ''காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் கோவையில் ஏராளமானோர் உள்ளனர். வறுமையின் காரணமாக பலர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று இடை நின்றுள்ளனர். இதன் பின்பு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காமல் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கு சிரமப்படுவதால் அடிப்படைத் தேவைகளுக்கு வழி செய்யும் வகையில் அரசுத் துறையில் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கக்கோரி கோவை மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், ''காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் கோவையில் ஏராளமானோர் உள்ளனர். வறுமையின் காரணமாக பலர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று இடை நின்றுள்ளனர். இதன் பின்பு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காமல் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கு சிரமப்படுவதால் அடிப்படைத் தேவைகளுக்கு வழி செய்யும் வகையில் அரசுத் துறையில் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.