முதலமைச்சர் அணிக்குத் தாவிய 3 தினகரன் ஆதரவு எம்பிக்கள் - அதிமுகவில் பரபரப்பு

நவம்பர் 27

டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா மற்றும் புதுச்சேரி எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு மாறினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் என அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர், சின்னமும், கட்சியும் தங்களுக்குத்தான் சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் முறையிட்டனர். இதனைக் கேட்ட தேர்தல் ஆணையம், இரட்டை இலைச் சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது. இதனிடையே, இரு தரப்பினரும் ஒருங்கிணைவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. 

அப்போது, சசிகலாவின் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தால் மட்டுமே இரு அணிகளும் ஒன்றிணையும் என ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டதால், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக உருவானது. மேலும், கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட தினகரனுக்கு 18 எம்எல்ஏக்களும், சில எம்பிக்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்குத்தான் எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனால், தினகரன் கூடாரம் கலகலக்கத் தொடங்கியது. தினகரன் அணியில் இருந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் தொண்டர்களும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு தாவத் தொடங்கினர். 

இந்த நிலையில், தினகரன் அணியில் இருந்த அதிமுக மாநிலங்களவை எம்.பி.யான நவநீதகிருஷ்ணன் இன்று திடீரென முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். மேலும், எம்பிக்கள் விஜிலா  புதுச்சேரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். பின்னர், ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிக்கள் மூவரும் கலந்து கொண்டனர். இதேபோல, தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியில் இணையக் கூடும் எனக் கூறப்படுகிறது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...