கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 28 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர் விளக்கம்


கோவை, நவம்பர் 27 

கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர்  N.J.குமரேஷ் தெரிவித்துள்ளார். 

நேற்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்தாப் (37) என்ற வாலிபர் கத்திகளில் மறைத்து வைத்து 816 கிராம் தங்க துண்டுகளை கடத்தி வந்தார்.  அவரை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவர் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக இன்று கோவை சுங்க மற்றும் கலால் வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



அப்போது, சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் மாவட்ட ஆணையர் N.J.குமரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை விமான நிலையத்தில் நேற்று தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டுள்ளார்.  அவரிடம் இருந்து 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தங்கம் கடத்தி வருபவர்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகிறார்கள்.  பயணிகள் தங்கம் கடத்தி வருகிறார்களா என்பதை கண்காணிக்க அதி நவீன ஸ்கேனர்கள் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.8.3 கோடி ஆகும்.

தொடர்ந்து,  விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 

என்று அவர் கூறினார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...