நவம்பர் 27
கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொசு உற்பத்தியாவதை தடுக்கக்கோரியும், சாக்கடைக்கு நடுவே குடிதண்ணீர் குழாய் செல்வதால், குடிநீரோடு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சத்தி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும், முறையாக குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொசு உற்பத்தியாவதை தடுக்கக்கோரியும், சாக்கடைக்கு நடுவே குடிதண்ணீர் குழாய் செல்வதால், குடிநீரோடு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சத்தி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும், முறையாக குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.