இரட்டை இலை விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் கேவியட் மனுத் தாக்கல்

நவம்பர் 27

இரட்டை இலை விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி தில்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தினகரன் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்திற்கு தடை கோரி தினகரனோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடர்ந்தால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தனித்தனியாக கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...