கோவை, நவம்பர் 25
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

கோவை மாவட்டம், காந்திபுரத்தில் இருந்து மாநகர பேருந்து பாலக்கரைக்கு சென்றுகொண்டிருந்தது. பேருந்து மதுக்கரை மார்க்கெட் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துகொண்டிருந்த நிலையில் சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

கோவை மாவட்டம், காந்திபுரத்தில் இருந்து மாநகர பேருந்து பாலக்கரைக்கு சென்றுகொண்டிருந்தது. பேருந்து மதுக்கரை மார்க்கெட் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துகொண்டிருந்த நிலையில் சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.