முறையான ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை, நவம்பர் 23

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்றே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களில் 12,524 ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே, எங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...