கோவை, நவம்பர் 23
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்றே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களில் 12,524 ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்றே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களில் 12,524 ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.