கோவையில் தொழில் முனைவோரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி

கோவை, நவம்பர் 23

கோவை, பீளமேடு பகுதியில் தொழில் முனைவோர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உஜில் சந்திரன். இண்டீரியர் டெக்ரேசன் செய்வதற்கான உபகரணங்கள், இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உபகரணங்கள் வாங்க 4 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் பொருட்களை கொடுக்காமல் சந்திரன் காலதாமதம் செய்து வந்த நிலையில், சிவக்குமார் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இந்நிலையில் கோவை வந்த சிவக்குமாரை தனியாக அழைத்துச் சென்ற சந்திரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் காயமடைந்த சிவக்குமார் அவரிடம் இருந்து தப்பி வந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...