கோவையில் தொழில் முனைவோரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி

கோவை, நவம்பர் 23

கோவை, பீளமேடு பகுதியில் தொழில் முனைவோர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உஜில் சந்திரன். இண்டீரியர் டெக்ரேசன் செய்வதற்கான உபகரணங்கள், இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உபகரணங்கள் வாங்க 4 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் பொருட்களை கொடுக்காமல் சந்திரன் காலதாமதம் செய்து வந்த நிலையில், சிவக்குமார் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இந்நிலையில் கோவை வந்த சிவக்குமாரை தனியாக அழைத்துச் சென்ற சந்திரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் காயமடைந்த சிவக்குமார் அவரிடம் இருந்து தப்பி வந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...