கடன் வாங்கியவரை வீட்டினுள் வைத்து பூட்டிய கந்துவட்டிக்காரர்

கோவை, நவம்பர் 22

கோவையில் கடன் வாங்கியவரை, வீட்டினுள் வைத்து கந்துவட்டிக்காரர் பூட்டி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ஒண்டிப்புதூர் அருகிலுள்ள கம்பன் நகரில் மோகன் - வாணி தம்பதியினர், கடந்த 11 வருடங்களாக சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, சோமனூர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இதனிடையே, இன்று இவர்களது வீட்டுக்கு வந்த ஆறுச்சாமி, வீட்டிற்குள் உரிமையாளர் மோகனை வைத்து பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் பள்ளிக்கு சென்று திரும்பிய மகள் தெருவில் நிற்க நேர்ந்தது. 



இது குறித்து தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ஆறுச்சாமியை அழைத்து வந்து வீட்டை திறந்து விட்டனர். வாங்கிய கடனை விட அதிக மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயல்வதாக மோகன் குற்றம்சாட்டினார். அப்போது, வீட்டை கடந்தாண்டு மோகன் பத்திரப்பதிவு செய்து வைத்தாகக் கூறி, அதற்கான பத்திரங்களை ஆறுச்சாமி போலீசாரிடம் காண்பித்தார். வீட்டை தனக்கு விற்றுவிட்டு காலி செய்யாமலும், பணத்தை திரும்பத் தராமலும் அலைகழித்த ஆத்திரத்தில் வீட்டை பூட்டிச் சென்றதாகவும் கூறினார். 

சொத்துக்கள் குறித்த பிரச்சனை என்றால் நீதிமன்றத்தில் இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினர், ஆறுச்சாமி வீட்டிற்குள் வைத்து கதவை மூடிச்சென்றது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...