டிச.,16-ல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் - ராகுல் காந்தியைத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றம்

நவம்பர் 20: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில், கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

கடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். சுமார் 19 ஆண்டுகள் அவரே தலைவர் பதவியில் இருப்பதாலும், அவரது உடல்நிலை கருதியும் புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா தலைமையில் இன்று நடந்தது. 

கூட்டத்திற்குப் பிறகு கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே சமயம், கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்வது தொடர்பான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ராகுலை தவிர வேறும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், வேட்புமனு தாக்கலில் கடைசி நாளில் ராகுலை கட்சியின் தலைவராக முறைப்படி அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்டாலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், அதுவரை கட்சி தலைவராக சோனியாவே தொடர்வார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒருவேளைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...