டிச.,16-ல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் - ராகுல் காந்தியைத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றம்

நவம்பர் 20: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில், கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

கடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். சுமார் 19 ஆண்டுகள் அவரே தலைவர் பதவியில் இருப்பதாலும், அவரது உடல்நிலை கருதியும் புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா தலைமையில் இன்று நடந்தது. 

கூட்டத்திற்குப் பிறகு கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே சமயம், கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்வது தொடர்பான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ராகுலை தவிர வேறும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், வேட்புமனு தாக்கலில் கடைசி நாளில் ராகுலை கட்சியின் தலைவராக முறைப்படி அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்டாலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், அதுவரை கட்சி தலைவராக சோனியாவே தொடர்வார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒருவேளைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...