கோவை என்னை வளர்த்த ஊர் - புதிய காவல் ஆணையர் நெகிழ்ச்சி பேட்டி

கோவை, நவம்பர் 18: கோவை மாநகரின் 27-வது காவல் ஆணையராக K.பெரியய்யா பதவியேற்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த K.பெரிய்யா கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 

அப்போது, கல்லூரியின் ஹாக்கி அணியின் கேப்டனாக பதவி வகித்தார். அதோடு, கோவை மாவட்ட கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 1989-ம் ஆண்டு காவல் துறையில் டி.எஸ்.பி. ஆக பணிக்குச் சேர்ந்த அவர் 1997-ல் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், சென்னை பெருநகர கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணி புரிந்து வந்தார்.

அவர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் கோவையை நன்கு அறிந்தவன். கல்லூரிப் படிப்பை இங்கு தான் முடித்துள்ளேன். கோவை என்னை வளர்த்தெடுத்த ஊர். இந்த ஊரின் அமைதிக்கு பல்வேறு திட்டங்களை வகுப்பேன்.



மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

காவல்துறையின் நற்செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...