கோவை என்னை வளர்த்த ஊர் - புதிய காவல் ஆணையர் நெகிழ்ச்சி பேட்டி

கோவை, நவம்பர் 18: கோவை மாநகரின் 27-வது காவல் ஆணையராக K.பெரியய்யா பதவியேற்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த K.பெரிய்யா கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 

அப்போது, கல்லூரியின் ஹாக்கி அணியின் கேப்டனாக பதவி வகித்தார். அதோடு, கோவை மாவட்ட கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 1989-ம் ஆண்டு காவல் துறையில் டி.எஸ்.பி. ஆக பணிக்குச் சேர்ந்த அவர் 1997-ல் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், சென்னை பெருநகர கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணி புரிந்து வந்தார்.

அவர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் கோவையை நன்கு அறிந்தவன். கல்லூரிப் படிப்பை இங்கு தான் முடித்துள்ளேன். கோவை என்னை வளர்த்தெடுத்த ஊர். இந்த ஊரின் அமைதிக்கு பல்வேறு திட்டங்களை வகுப்பேன்.



மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

காவல்துறையின் நற்செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...