கோவை, நவம்பர் 14
அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் செயலில் ஈடுபட்டு வரும் சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை, பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த வெள்ளைய திருப்பதி என்ற மாணவர் தங்கி கோவைபுதூரில் செயல்பட்டு வரும் சிபிஎம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுதியில் சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்துவருவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தன்னை ராகிங் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கித் தர வற்புறுத்துகின்றனர். மேலும், அவர்களின் துணிகளை துவைக்கச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர். விடுதியில் பாதுகாவலர் இல்லாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் கனவுகளோடு வந்த தன்னை படிக்க விடாமல் தொடந்து துன்புறுத்துகின்றனர். விடுதியில் மாணவர் அல்லாத நபர்களும் தங்கி உள்ளனர். தற்போது அளித்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் விடுதிக்குச் செல்ல அச்சமாக உள்ளது."
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.
அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் செயலில் ஈடுபட்டு வரும் சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை, பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த வெள்ளைய திருப்பதி என்ற மாணவர் தங்கி கோவைபுதூரில் செயல்பட்டு வரும் சிபிஎம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுதியில் சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்துவருவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தன்னை ராகிங் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கித் தர வற்புறுத்துகின்றனர். மேலும், அவர்களின் துணிகளை துவைக்கச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர். விடுதியில் பாதுகாவலர் இல்லாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் கனவுகளோடு வந்த தன்னை படிக்க விடாமல் தொடந்து துன்புறுத்துகின்றனர். விடுதியில் மாணவர் அல்லாத நபர்களும் தங்கி உள்ளனர். தற்போது அளித்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் விடுதிக்குச் செல்ல அச்சமாக உள்ளது."
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.