அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் தொல்லை- மாணவர் புகார்

கோவை, நவம்பர் 14

அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் செயலில் ஈடுபட்டு வரும் சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இதில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த வெள்ளைய திருப்பதி என்ற மாணவர் தங்கி கோவைபுதூரில் செயல்பட்டு வரும் சிபிஎம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுதியில் சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்துவருவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தன்னை ராகிங் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கித் தர வற்புறுத்துகின்றனர். மேலும், அவர்களின் துணிகளை துவைக்கச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர். விடுதியில் பாதுகாவலர் இல்லாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. 

தருமபுரி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் கனவுகளோடு வந்த தன்னை படிக்க விடாமல் தொடந்து துன்புறுத்துகின்றனர். விடுதியில் மாணவர் அல்லாத நபர்களும் தங்கி உள்ளனர். தற்போது அளித்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் விடுதிக்குச் செல்ல அச்சமாக உள்ளது."

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...