அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் தொல்லை- மாணவர் புகார்

கோவை, நவம்பர் 14

அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் செயலில் ஈடுபட்டு வரும் சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இதில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த வெள்ளைய திருப்பதி என்ற மாணவர் தங்கி கோவைபுதூரில் செயல்பட்டு வரும் சிபிஎம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுதியில் சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்துவருவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தன்னை ராகிங் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கித் தர வற்புறுத்துகின்றனர். மேலும், அவர்களின் துணிகளை துவைக்கச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர். விடுதியில் பாதுகாவலர் இல்லாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. 

தருமபுரி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் கனவுகளோடு வந்த தன்னை படிக்க விடாமல் தொடந்து துன்புறுத்துகின்றனர். விடுதியில் மாணவர் அல்லாத நபர்களும் தங்கி உள்ளனர். தற்போது அளித்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் விடுதிக்குச் செல்ல அச்சமாக உள்ளது."

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...