கோவை, நவம்பர் 14
வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு இரண்டு நாட்களில் நகர்ந்து விடும். தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். இவ்வாறு அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைக்கு பிறகு ஒடிசாவின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு இரண்டு நாட்களில் நகர்ந்து விடும். தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். இவ்வாறு அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைக்கு பிறகு ஒடிசாவின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.