கோவை, நவம்பர் 13
மாநில அரசுகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என கோவை விமான நிலையத்தில் புதுவை மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை முதலமைச்சர் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-
"மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு அதிக அளவில் இருப்பதால் பாதிக்கப்பட்டது புதுவை மாநிலம். மாநில அரசின் செயல்பாட்டினை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு, துணை நிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது. புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மக்கள் நலத் திட்டங்களில் அரசு உறுதியாக இருக்கும் நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்குத் தடை விதித்து வருகிறார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி ஏற்படவில்லை, பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு சோதனை மேற்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது.
மத்திய அரசிற்குப் பணியாத நபர்களை, வியாபாரிகளைப் பணியவைக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ-க்கள் பதவிப் பிரமாணம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம்தான் கேட்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி வரியால் 30 சதவிகித வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை 12 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநில அரசுகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என கோவை விமான நிலையத்தில் புதுவை மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை முதலமைச்சர் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-
"மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு அதிக அளவில் இருப்பதால் பாதிக்கப்பட்டது புதுவை மாநிலம். மாநில அரசின் செயல்பாட்டினை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு, துணை நிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது. புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மக்கள் நலத் திட்டங்களில் அரசு உறுதியாக இருக்கும் நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்குத் தடை விதித்து வருகிறார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி ஏற்படவில்லை, பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு சோதனை மேற்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது.
மத்திய அரசிற்குப் பணியாத நபர்களை, வியாபாரிகளைப் பணியவைக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ-க்கள் பதவிப் பிரமாணம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம்தான் கேட்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி வரியால் 30 சதவிகித வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை 12 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.