புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: புதுவை முதலமைச்சர் பேட்டி

கோவை, நவம்பர் 13

மாநில அரசுகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை என கோவை விமான நிலையத்தில் புதுவை மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை முதலமைச்சர் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு அதிக அளவில் இருப்பதால் பாதிக்கப்பட்டது புதுவை மாநிலம். மாநில அரசின் செயல்பாட்டினை நேரடியாக ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு, துணை நிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது. புதுவையில் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மக்கள் நலத் திட்டங்களில் அரசு உறுதியாக இருக்கும் நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களுக்குத் தடை விதித்து வருகிறார்.



மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சி ஏற்படவில்லை, பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு சோதனை மேற்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது.

மத்திய அரசிற்குப் பணியாத நபர்களை, வியாபாரிகளைப் பணியவைக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ-க்கள் பதவிப் பிரமாணம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம்தான் கேட்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி வரியால் 30 சதவிகித வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை 12 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...