கோவையில் கியாஸ் கசிவால் தீவிபத்து : வீட்டு உபயோகப்பொருட்கள் முற்றிலுமாக கருகின

கோவை, நவம்பர் 13 

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளன. 5 குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். 

இந்த வீடுகளுள் ஒன்றில் வசிப்பவர் சுகுணா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று வழக்கம் போல் வீட்டு சமையல் வேலைகளை முடித்துவிட்டு சுகுணாவும் அவரது கணவரும் பணிக்கு புறப்பட்டனர்.  குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். 

மதியம் 1 மணியளவில் வீட்டில் இருந்து கரும்புகை கசியத்தொடங்கியது.  தொடர்ந்து, வீட்டின் கூரையில் தீப்பிடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. 

இது தொடர்பாக, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 5 பேர் கொண்ட தீயணைப்பு படைக்குழுவினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 



சுமார் இருபது நிமிட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, மெத்தை மற்றும் சமையல் பாத்திரங்கள் முற்றிலுமாக எரிந்தன. 

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அருகே தனியாருக்குச்சொந்தமான மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. 

தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிற்கப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...