போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

கோவை, நவம்பர் 11

போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த 9 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. 



கோயம்புத்துார் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மற்றும் ஏஆர்சி குழுமம், ஷிவா டெக்ஸ் யார்ன் ஆகியவற்றின் சார்பில் கோவை ஈச்சனாரியில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற கோவை மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், 9–15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொதுவான மருத்துவ பரிசோதனைகள், பல், கண் போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 



மருத்துவப் பரிசோதனைக்குப்பின் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் படங்கள் காண்பிக்கப்பட்டன. காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டன. 



இதில், கோவை காவல்துறை, சட்டம், ஒழுங்குத் துணை ஆணையர் லட்சுமி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார். ரவுண்ட் டேபிள் இன்டியாவின் ஏரியா 7-ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இளங்கோ ஆகியோர் கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்.

குழந்தைகளுக்கு இந்த மருத்துவ முகாம், சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் மட்டுமின்றி திரைப்படமும் கண்டு களித்து, சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்தது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...