நவம்பர் 10
மேற்கு வங்க மாநிலத்திற்குத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார். இதற்காக புதிய செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சி தொடங்கத் தனது அன்பு ரசிகர்களுடன், விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
கமல் புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஏற்கனவே திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து ஆலோசனை செய்தார். சமீபத்தில் சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து பேசினர். அவரிடமும் தான் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்தார். இவ்வாறு பாஜக, மற்றும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வந்த அவர், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, அரசியல் பிரவேசத்திற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் மூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவர், தற்போது மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திற்குத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார். இதற்காக புதிய செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சி தொடங்கத் தனது அன்பு ரசிகர்களுடன், விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
கமல் புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஏற்கனவே திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து ஆலோசனை செய்தார். சமீபத்தில் சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து பேசினர். அவரிடமும் தான் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்தார். இவ்வாறு பாஜக, மற்றும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வந்த அவர், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, அரசியல் பிரவேசத்திற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் மூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவர், தற்போது மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.