அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கமல்ஹாசன் - மேற்கு வங்க முதலமைச்சருடன் சந்திப்பு

நவம்பர் 10 

மேற்கு வங்க மாநிலத்திற்குத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார். 

தனது பிறந்த நாளையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார். இதற்காக புதிய செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சி தொடங்கத் தனது அன்பு ரசிகர்களுடன், விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

கமல் புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஏற்கனவே திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து ஆலோசனை செய்தார். சமீபத்தில் சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து பேசினர். அவரிடமும் தான் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்தார். இவ்வாறு பாஜக, மற்றும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வந்த அவர், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார். 

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, அரசியல் பிரவேசத்திற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் மூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவர், தற்போது மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...