ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


கோவை, நவம்பர் 10 

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

கோவை மாவட்டம் கோவில்பாளையம் விநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்செழியன் என்பவர் பெயரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சேகரன் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் ரூ. 5000 லஞ்சம் பெற்றதாக கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 

காவலர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, சேகரன் மற்றும் தனபால் ஆகியோரை வரும் 24-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...