ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


கோவை, நவம்பர் 10 

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

கோவை மாவட்டம் கோவில்பாளையம் விநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்செழியன் என்பவர் பெயரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சேகரன் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் ரூ. 5000 லஞ்சம் பெற்றதாக கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 

காவலர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, சேகரன் மற்றும் தனபால் ஆகியோரை வரும் 24-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...