கோவை, நவம்பர் 9: கோவை மாநகர எல்லைக்குள் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்ட வாகனதணிக்கையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 468 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்கும் விதமாக தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைகளில் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் வாகனதணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாகனதணிக்கையின் போது ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்றும் (8-ம் தேதி) இன்றும் (9-ம் தேதி) இரண்டு நாட்களில் 468 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்கும் விதமாக தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைகளில் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் வாகனதணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாகனதணிக்கையின் போது ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்றும் (8-ம் தேதி) இன்றும் (9-ம் தேதி) இரண்டு நாட்களில் 468 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.