டிரம்ப்பின் மகள்வருகை - ஐதராபாத்தில் பிச்சைக்காரர்களுக்குத் தடை

நவம்பர் 9: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி, ஐதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை விதித்து போலீஸார் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

ஐதராபாத் நகரில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை நடக்கும் சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வருகிறார். இவரது வருகையை ஒட்டி தற்போது முதலே ஐதராபாத் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஐதராபாத் போலீசார் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வரை ஐதராபாத்தில் இனி பிச்சை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டு ஐதராபாத்துக்கு முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வருகை தந்த போதும் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...