"வருமான வரித்துறை தினகரனை பணிய வைக்க முயற்சிக்கிறது"

டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில அரசின் துணையோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினரும்,டிடிவி தினகரன் ஆதரவாளருமான ஏ.பி. நாகராஜ் கோவில்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் அம்மா பிம்பத்தை சிதைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக அதிமுக பிளவுபடுத்தப்பட்டதாகவும், அதிமுக கட்சியை அழிக்கும் நடவடிக்கைக்கு பலரும் துணை போனதாகவும் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி பலப்பட்டு விடும் என்பதாலும், சசிகலா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதிமுக பிளவுபட்டு விடுமென்பதாலும்,தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறிய அவர், நீதித்துறையை தவிர்த்த அனைத்து துறைகளும் அரசின் கைப்பாவைகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஒராண்டில் பல வருமான வரித்துறை சோதனைகள் நடந்தாலும், வேண்டப்பட்டவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறிய அவர், சேகர்ரெட்டி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனை எதற்காக நடத்தப்பட்டது? என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

இந்த வருமான வரித்துறை சோதனை மாநில அரசின் துணையோடு நடைபெறுவதாகவும், டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும், வருமான வரித்துறை மிரட்டலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது எனவும் நாகராஜ் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கைப்பற்றும் முயற்சியாக கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...