சென்னை மாநகராட்சிக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்

நவம்பர் 8: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணியின் உத்தரவுப்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் தினந்தோறும் வழங்கப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், டாக்டர்.நிலோஃபர் கபீல், திரு.எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகர், புவனேஸ்வரி நகர், இராம்நகர், மடிப்பாக்கம், சதாசிவம் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர்.



தொடர்ந்து, சதுப்பு நிலப்பகுதிகளுக்கு பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை-11 பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதையும், அதில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

அமைச்சர் வேலுமணி ரிப்பன் மாளிகையில் அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் தெரிவிக்கையில், பெருநகர சென்னை மாநகரில் 30.10.2017 முதல் 07.11.2017 வரை 47.38 செ.மீ. அளவு கனமழை பதிவாகி உள்ளது. இந்தக் கனமழையினால் மழைநீர் தேங்கிய 269 இடங்களில் 155 மோட்டார் பம்புகள் மூலம் 180 இடங்களில் உடனடியாக அகற்றப்பட்டு, மீதமுள்ள 89 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி இடைவிடாது நடைபெற்று வருகிறது. அதிகளவு மழைநீர் தேங்கியுள்ள கார்கில் நகர், இராஜாஜி நகர், பெரியார் நகர், விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர் போன்ற இடங்களில் 134 மோட்டார் பம்புகள் பயன்பாட்டில் உள்ளன. மழையின் காரணமாக விழுந்த 88 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மேலும், பொதுமக்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 1913 மூலமும், 044-2536 7823, 2538 4965, 2538 3694 ஆகியவற்றின் வழியாக 6,955 புகார்கள் பெறப்பட்டு, 6,347 புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 608 புகார்களுக்குத் தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை கூடுதலாக்கி விநியோகிக்க, வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, இன்று முதல் சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். என்றார். 

அமைச்சரின் இந்த உத்தரவுப்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...