நவம்பர் 5: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஓரிரு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை சிறிது சிறிதாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதால் இன்னும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தற்போது வரை பெய்த பருவ மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்றுள்ளன.
மழையளவு விபரம்:-
கலக்காடு - 153 மிமீ
பாபநாசம் அணை - 142 மிமீ
மணிமுத்தாறு அணை - 124 மிமீ
நன்குனேரி - 90 மிமீ
வள்ளியூர் - 79 மிமீ
அம்பாசமுத்திரம் - 68 மிமீ
சேரன்மஹாதேவி - 60 மிமீ
தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை சிறிது சிறிதாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதால் இன்னும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தற்போது வரை பெய்த பருவ மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்றுள்ளன.
மழையளவு விபரம்:-
கலக்காடு - 153 மிமீ
பாபநாசம் அணை - 142 மிமீ
மணிமுத்தாறு அணை - 124 மிமீ
நன்குனேரி - 90 மிமீ
வள்ளியூர் - 79 மிமீ
அம்பாசமுத்திரம் - 68 மிமீ
சேரன்மஹாதேவி - 60 மிமீ