கோவை, நவம்பர் 4: கோவை தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட வீரபாண்டி குட்டை தடுப்பணை அருகே சேறும் சகதியான இடத்தில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், வனத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் குழுவினர் விரைந்து வந்து யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை தடுப்பணையில் நீர் குடிக்க வந்ததாகவும், அந்த யானையுடன் ஒரு குட்டி யானையும் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நேரமாக யானை சகதியில் சிக்கி நின்று கொண்டிருப்பதால், அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட வீரபாண்டி குட்டை தடுப்பணை அருகே சேறும் சகதியான இடத்தில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், வனத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் குழுவினர் விரைந்து வந்து யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை தடுப்பணையில் நீர் குடிக்க வந்ததாகவும், அந்த யானையுடன் ஒரு குட்டி யானையும் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நேரமாக யானை சகதியில் சிக்கி நின்று கொண்டிருப்பதால், அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.