கோவையில் கந்துவட்டி கொடுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - கட்சி சார்பற்ற விவசாயிகள் போலீஸ் கமிஷனர், கலக்டரிடம் மனு

கோவை, நவம்பர் 3: கோவை மாவட்டத்தில் தலைவிரித்து ஆடும் கந்து வட்டி கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். 

இது தொடர்பாக சங்கத்தின் மாநில துணை தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் விவசாயத் தொழிலை நம்பி பல விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளனர். விளைச்சலின் போதும் வியாபரத்தின் போதும் அவர்களை நாடும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நயமாக பேசி பணத்தை கொடுக்கின்றனர். 



தொழிலில் நட்டம் ஏற்படும் போது குறிப்பிட்ட நபர்களால் உடனடியாக பணத்தை திரும்பச்செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கந்து வட்டி கும்பல் அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு தகாதவார்த்தைகளில் பேசுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். 

இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

மேலும், டாஸ்மாக் கடைகள் தவிர சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்' என்றார். 

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...