கோவை, அக்டோபர் 31: கோவையில் கஞ்சா தகராறில் நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷங்கர் என்பவரை ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த காந்திவேல் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், ஷங்கருடன் இருந்த நந்தகுமார் என்பவரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காந்திவேலுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷங்கர் என்பவரை ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த காந்திவேல் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், ஷங்கருடன் இருந்த நந்தகுமார் என்பவரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காந்திவேலுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.