முத்தண்ணன் குளத்தில் தொடரும் தூய்மைப் பணி


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.

அதன்படி, இன்று (அக்டோபர் 29) 38-வது வார களப்பணியாக முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இஎப்ஐ கோயம்புத்தூரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணப்பணியில் கோவை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த களப்பணியில் 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகமும், அமெரிக்காவின் The Nature Conservancy அமைப்பும் இணைந்து குளங்களை சீரமைக்கும் ஆய்வுப் பணியின் முதற்கட்ட கலந்தாய்வினை தன்னார்வலர்களுடன் மேற்கொண்டனர்.

பின், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் வெள்ளலூர் ராஜ வாய்க்கால் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டி ஊரகவளர்ச்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, விரைந்து நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...