முத்தண்ணன் குளத்தில் தொடரும் தூய்மைப் பணி


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.

அதன்படி, இன்று (அக்டோபர் 29) 38-வது வார களப்பணியாக முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இஎப்ஐ கோயம்புத்தூரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணப்பணியில் கோவை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த களப்பணியில் 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகமும், அமெரிக்காவின் The Nature Conservancy அமைப்பும் இணைந்து குளங்களை சீரமைக்கும் ஆய்வுப் பணியின் முதற்கட்ட கலந்தாய்வினை தன்னார்வலர்களுடன் மேற்கொண்டனர்.

பின், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் வெள்ளலூர் ராஜ வாய்க்கால் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டி ஊரகவளர்ச்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, விரைந்து நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...